செவ்வாய், 25 ஜூன், 2019 | By: Ananda

மெளனத் தீ..


சொற்கள் எல்லாம் தீர்ந்து போயின..
தீயென பற்றி எரிந்தது அவள் மௌனம்..
அதை அணைக்க இயலாது தவிக்கையில்,
நீர் தெளிக்க ஒரு கையும் நீள வில்லை,
அந்த மௌனம் சுடர்விட்டு மெல்ல எரிந்தது..
அதை மறைக்க ஆயிரம் சத்தங்கள் தேவை பட்டன..
உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கிறது அந்த மௌனம்..
சிலர் வீட்டில் சீரியல் சத்தம்..
சிலர் வீட்டில் ரேடியோ சத்தம்..
சிலர் வீட்டில் குழந்தைகளை திட்டும் சத்தம்..
இப்படி மறைக்கவும் மறக்கவும் எத்தனையோ சத்தங்கள்..
ஆயினும் அந்த மௌனத் தீ சத்தமாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது!!
காது கொடுத்து கேளுங்கள் சுயநல மூடர்களே..