புதன், 16 மே, 2012 | By: Ananda

சுக பிரசவம் அல்ல சுய-பிரசவம்



கருத்தில் கருவிக்கொண்டே இருந்தாலும்-


காகிதத்தில் உதிர மறுக்கும் வார்த்தை போல்..


வாசகர் இல்லாத கவிதையை போல்..


கருவறை வாசலில் முட்டி நின்றும்-


பிரசவிக்க முடியாத சிசுவை போல்,


கிளை நுனியில் துளிர்க்கும் முன்பே-


சறுகாய் உலர்ந்துவிட்ட இலை போல்..


விளையத் துடித்தும்,நிலத்தைப் பிளக்காமல்-


புதைந்து கிடக்கும் விதைப் போல்..


மூடிக் கிடக்கும் இமைகளுக்குள்-


திறக்கத் துடிக்கும் கண்ணின் மணிகள் போல்..


வெளிவர துடித்துக் கொண்டிருக்கிறது-


எனக்குள் கட்டுண்டு கிடக்கும்-உண்மையான நான்!!!!