புதன், 29 ஜூலை, 2009 | By: Ananda

காற்றின் திசைக்கெல்லாம்
இசைந்துக் கொடுக்கும் தென்னங் கீற்று,
திசை அறியாமல் வேலி எங்கும்
படரும் கொடி,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
மணற்போர்வை விரித்த பாலைவனம்,
மரத்தடியில் விழத்துடிக்கும் கிழிந்த இலை,
மெதுவாய் உருகும் பனிக்கட்டி,
மரத்தில் சிக்கி
மீண்டும் பறக்க துடிக்கும் பட்டம்,
பாறையின்மேல் தெறித்து
சிதறிய நீர்த்துளி,
இவற்றுள் எதைக் கண்டாலும்,
கரை தேடும் அலை போல்,
அலைந்து கொண்டிருக்கும் என் மனமே,
நினைவுக்கு வருகிறது!!