திங்கள், 19 ஆகஸ்ட், 2013 | By: Ananda

பூச்சூடாப் பூவை..

 
 
 
நிறைந்த பூக்கூடையை, நித்தமும் தூக்கி சுமந்து,
வீதி  வீதியாய், விற்று விட்டு,
வீட்டுக்கு வந்தபின்  பிள்ளைக்கு அரை முழம் சூட்டி விட்டு,
கடைசி முழம்,கையில் வைத்து,
ஒரு முறை ஏக்கத்தோடு முகர்ந்து விட்டு,
பிரிந்த கணவன் படத்திற்கு சூட்டிய அவளுக்கு,
ஒரு துளி கண்ணீர் தான் மிச்சம் கிடைத்தது,
ஊருக்கு கொடுத்தாலும், உள்ளங்கை சேர-
கொடுப்பினை இல்லை அவளுக்கு..
மல்லிகை மணக்கவில்லை, மனம் நொந்த விதவைக்கு..