செவ்வாய், 23 செப்டம்பர், 2008 | By: Ananda



கவிதை கருவுற்று,
முழுதும் வளர்வதர்க்குள்,
தாய்க் கருத்து
மாண்டு விட்டதால்,
இன்று
ஆரம்பித்து முடிக்கப்படாமல்,
அநாதையாய் நிற்கிறது என் கவிதை
காகிதத்தில்
சனி, 23 ஆகஸ்ட், 2008 | By: Ananda

புதிய பயணம்




இதுவரை கடந்து வந்த நாட்களை
அலசி பார்க்க,
ஒரு நினைவு சுற்றுலா
சென்று வந்தேன்,
அதே பழைய பாதையில்,
இன்று நான் தொடங்குவதோர் புதிய பயணம்..
அன்னை விரல் பிடித்து
மழலையாய் தவழ்ந்த காலம் முடிந்து,
பள்ளிப் பருவத்தின்
வண்ண திருவிழா முடிந்து,
கல்லூரி காதலின்
எண்ணற்ற கனவுகள் முடிந்து,
இன்று , நான்!!!
வெறும் நானாக!!!
அன்னை,தந்தை,சகோதரர்,தோழர்கள்,காதலர்
என்று,
யாருடனும் நிழலாய் நடக்காமல்,
என் நிழல்,என்னுடன்,
என்னை மட்டுமே நம்பி,
எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி,
எதையும் தாங்கும் பக்குவத்துடன்,
இன்று நான்!!!
இது ஓர் புதிய பயணம்....
வழியெங்கும் இன்பமாய் சுதந்திர காற்று!!!
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008 | By: Ananda

The War Within me...


The Distant dreams
grown over the years,
haunt my mind,
like the mirage,
Always far from reach,
The Vision fades not,
from my mind's eye,
Yet the colour and vigour of it,
Keeps fading, and fading,
And my mind,keeps asking,
"Is it still worthwhile?"
But my heart refuses
To release its hold,
to giveup, and forget,
The Million dreams,cherished
over the yesteryears,
A Constant struggle between,
The Devil that rests not,in my mind,
trying every moment,
to surrender my dreams,
to accept defeat,
And believe it to be my destiny...
And yet the light in my heart,
puts up an undying struggle,
to stop the pervading darkness,
to believe that the morrow still holds good,
to hope that,My Dreams too true,
To be My Destiny!!
But Alas!! The War wages on with no end......





திங்கள், 30 ஜூன், 2008 | By: Ananda

My Lone Shadow..


The Aroma of freshly
brewed coffee,
The Melody of rain
drizzling over wet soil,
The gentle breeze
washing over my hair,
The flaming red,
lining the grey clouds,
Matching the flame of the
burning candle,
The perfect evening with just
one thing amiss,
My lone shadow lingering by,
Without you by my side...
ஞாயிறு, 29 ஜூன், 2008 | By: Ananda

without you...


The moments of solitude,

Initially suffocate me,

But the ragged breathing gives way to a slow,deep pace,

As the memories surround me,

I get lost in an unknown world,

All alone,

the way you left me,when you did,

The days and nights,

give way to weeks and months,

The weeks and months,

give way to years and more years,

But life seems to stand still

for a part of me,

The rays of truth

blind my eyes,and make me blink,

yet the part in me,

fails to acknowledge the truth,

And accept the fact,

that you ve gone..

forever..

To a distant world,never to come back,

leaving me behind to a forsaken fate...

கல்லூரி நாட்கள்..




விடியல் பொழுதில் திறக்கும்
சொர்க்க வாசலைப் போல,
பருவம் பூத்த வேளையில்,
கல்லூரி வாசல் நோக்கி,
ஆயிரம் கனவுகளோடு நுழைந்த,
எத்தனையோ மாணவர்களுக்குள்
நானும் அடக்கம்..

முதல் நாள்,முதல் வகுப்பே
தாமதமாய் நுழைந்த ஞாபகம்,
பரிச்சயம் இல்லாத முகங்கள்,
இருக்கை தேடி,அறிமுகம் நாடி
பிள்ளையார் சுழி போட்ட,
முதல் கல்லூரி நட்பு,
இன்றும் தொடரும் இன்ப இன்னல்...

இடைவெளியின்றி,ஒவ்வொரு இடைவேளையும்
அடித்த லூட்டி,

கண்ணைச் சொருகும்,வகுப்பு நேரங்களில்,
குறும்புடன் படித்த
துண்டு சீட்டு பாடங்கள்,

ஒரே நிற ஆடை அணிந்த நாட்களில்,
ஓயாமல் ஒட்டிய ஞாபகங்கள்,

வெள்ளை சட்டையில்
தேநீர் கறையாகிய நினைவுகள்,

பரிட்சை நேரங்களில்
படிக்க மறந்த பாடங்களும்,
மறக்காமல் மாற்றிய பேனாக்களும்,

தேர்வு முடிவு முன் தோன்றும் திகிலும்,
பின் தோன்றிய வேதாந்தமும்,

முதல் நாள் பேருந்து பயணத்தில்
போடும் சண்டைகளும்,
அடுத்த நாள் பயணத்தில் தேடிய சமாதானமும்,

விடுமுறை நாட்களில்
ஓயாமல் பேசிய தொலைபேசி கதைகள்,
வரலாறு காணாத தொலைபேசி கட்டனங்கள்,

வினாத் தாளின் பின்பக்கம் எழுதிய
எண்ணற்ற கவிதைகள்,

தேடிய விழிகளுக்கு கிடைத்த
பார்வை பரிசுகள்,

எத்தனை முறை கேட்டாலும்
புத்தியில் ஏறாத,
ஆசிரியரின் கடுந்சொர்க்களும் பாடங்களும்,

ஒன்றாய் உணவருந்திய உல்லாசங்களும்,

அன்பு,நட்பு,கோபம்
ஊடல்,கூடல்,பிரிவு
மௌனம்,வலி,குறும்பு
என்று
மரக்கிளை முளைத்த இலைகளை போல,
நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமாய்,
ஆயிரம் கோடி நினைவுகள்,
என்றாலும்..
ஒரு துளி கண்ணீரால்,
முற்றுப்புள்ளி வைக்கலாம்,
கல்லூரி வாழ்க்கைக்கும்,
இந்த கவிதைக்கும்,
என் நினைவுகளுக்கு அல்ல..
ஞாயிறு, 15 ஜூன், 2008 | By: Ananda

நதியின் காதல்..


கடலில் கலக்குமுன்,
கடந்த கற்களின்மீது,
காதல் கொண்டு,
கல்லின் மீது ஈரமாய் படிந்த
நதியின் மனது,
இன்று பாசியாய் கிடக்கிறது!!!!

உறுப்புகளை தானம் செய்வோம்..


சக உயிர்களுக்காக....
கடைசி சொட்டு உருகி,இன்னும்
ஒரு சில நொடிகள் மட்டுமே,
பிரகாசிக்க போகும் மெழுகின் தீயில்,
புது விளக்கொன்று ஏற்றப்பட்டு,
மறுஜென்மம் எடுக்கும் வெளிச்த்தை போல,

வாழும் காலத்தில்,
வண்ணங்கள் அத்தனையும்,
விரும்பியவை அனைத்தையும்,
பார்த்து களித்த நம் இரு கண்களும்,
நாம் வாழ்ந்து முடிந்த பின்னாவது,
இருட்டை மட்டுமே பரிச்சய படுத்தி கொண்டு,
வண்ணமும் வடிவமும் இன்றி,
வாழும் உயிர்களுக்கு,
புதியதோர் பார்வையாய் இருக்கட்டுமே...

வாழும் காலத்தில்,
'என் இதய துடிப்பு நீ',
என்று பாடிய கவிதைகள் போக,
இதயம் துடிப்பது நின்ற பின்னும்,
இன்னொரு உடலில் நம் இதயம் துடிக்கட்டுமே...

வாழும் காலத்தில்,
கற்பனையில் காதலுக்காக,
கொடுத்த இதயத்தை,
உண்மையில் இன்னொரு உயிர் வாழ
இன்பமாய் பரிசு அளிப்போம்...

வாழும் காலத்தில்,
உல்லாசமாய் ஊதி தள்ளிய சிகரெட்டில்,
எத்தனையோ நாட்கள் ,
சிதைந்த நம் நுரையீரல்,
நாம் வாழ்ந்து முடிந்த பின்னாவது,
சுதந்திரமாய்,இன்னொரு உயிர்
சுவாசிக்க உதவட்டுமே...

உயிர் கொடுப்பதும்,காப்பதும்,
கடவுள்,தாய்,மருத்துவர் மட்டும் அல்ல,
நம்மாலும் இயலும்,
சக உயிர்களை சாகாமல் காப்போம்...