புதன், 7 ஜனவரி, 2015 | By: Ananda

மார்கழி...





விடியலில் மூடுபனி,
வீடுகள்தோறும் வாசலில் கோலங்கள்,
கோலத்தின் நடுவே சாண உருண்டை,
அதில் மஞ்சள் கதிரவன் போல் சிரிக்கும்-
 பூசணிப் பூ,
வானொலியில் அமுதமென பொழியும் திருப்பாவை,
கேட்டுக்கொண்டே வாசலில் அகல் விளக்கேற்றி வைப்பாள் பாட்டி,
 மாலையில் தொலைக்காட்சியில் திருவையாறு கீர்த்தனைகள்,
திருவாதிரைக் களி பிரசாதம்,
மாதங்களில் மார்கழி....

0 கருத்துகள்: