திங்கள், 29 அக்டோபர், 2012 | By: Ananda

மழைத் துளி..



பொதுவாய் தனித்திருக்கும் என் வீட்டுச் சுவர்களை,

 இன்று அழகாய் நனைத்துக் கொண்டிருக்கிறது

 விடாத மழை,

 வழக்கமாய் சூழ்ந்திருக்கும் அமைதியும், மௌனமும்,
 

 இன்று விரட்டப்பட்டது,
இன்பமான மழையின் இசையால்,

 இருட்டில் பளிச்சிடும் மின்னல், இடியால்...

 தனிமை பிடிக்கிறது,இன்று மட்டும்..

 தனித்த வீடும் பிடிக்கிறது, இன்று மட்டும்..

 கம்பியை நனைத்து கீழே விழக் காத்திருக்கும் மழை துளிகள்-

 என்னை பார்த்து சொல்வது கேட்கிறது,

 "சேரும் இடம் சேரும் வரை, என்னைப் போல்-

பொறுமையாய் பற்றிக் கொண்டு இரு" என்று...


 

0 கருத்துகள்: